October 11, 2013

பிழையாக விளங்கப்படும் ஹதீஸ் கலை விதிகள் ஓர் ஆய்வு


ஹதீஸ் கலை என்பது மிகவும் பெறுமதியான நுணுக்கமான ஒரு கலையாகும்.இஸ்லாத்தின் சட்டம் இயற்றும் ஏக அதிகாரமான மூலாதாரத்தை தீர்மானிகும் அதிகாரம் இந்த விதியின் ஊடாகவே அடையப்படும்.

இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை கொச்சைபப்டுத்த பல வழிமுறைகளை பலர் செய்துள்ளனர் என்பதை அறிய ஹதீஸ் கலை மிகப்பெரும் பங்கை ஆற்றியுள்ளது.

இஸ்லாமிய மூலாதாரத்தின் முதல் வகையான அல் குர்ஆனில் எவரும் கை வைக்க முடியாது என்பதோடு கைவைப்பதட்கான வாயல் மூடப்பட்டே உள்ளது.ஆனாலும் இரண்டாவது மூலாதாரமான ஹதீஸ்கள் பெயரில் பல இட்டுகட்டப்பட்ட புனைவுகளும் கப்சாக்களும் புகுத்தப்பட்டன.

இட்டுகட்டியவர்களில் சிலர் அதை ஒப்புக்கொண்ட வரலாறும் உள்ளது.சிலர் தாம் இஸ்லாத்துக்கு நன்மை கருதியே இட்டுகட்டினோம் என்றும் சிலர் இஸ்லாத்தை கொச்சைப்படுத்த இட்டுகட்டினோம் என்று கூறியும் உள்ளனர்.

எனவே ஹதீஸில் இட்டுகட்டபட்டதுபோல் அல் குர்ஆனில் எதுவும் நடக்கவில்லை என்பதால் ஹதீஸ் பெயரால் வரக்கூடிய அணைத்து செய்திகளையும் எந்த வித சந்தேகமும் இல்லாத அல்லாஹ்வின் வார்த்தையான அல் குர்ஆனின் இடத்தில் வைத்து பார்க்க முடியாது.

ஆனாலும் குர்ஆனில் உள்ள அடிப்படைகளுக்கு நேர்பாடாகவோ அடிப்படைகளுக்கு முரண் இல்லாதவாரோ அல்லது இணைவைப்பை தூண்டுகின்ற மூடநம்பிகையை ஏற்படுத்துகின்ற ஆபாசத்தை வலியுறுத்துகின்ற சட்டங்கள் இல்லாதவாரோ மேலதிக தகவல்களை சட்டங்களை ஹதீஸ் அறிவிப்புகள் கொண்டிருந்தாள் அதை நாம் பின்பற்றுவதில் எந்த பிழையும் இல்லை.

எதிலும் நடுநிலை சமுதாயமாக இருக்கும் இஸ்லாமிய சமூகம் இந்த விடயத்திலும் நடுநிலை சமூகமாக இருக்க வேண்டும்.

இஸ்லாத்தில் மூன்று வகை கூட்டத்தை நாம் இனம் கண்டுள்ளோம்.

ஒன்று:அல் குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ்கள் தேவை இல்லை என்ற கூட்டம்

இரண்டு: ஹதீஸ் என்று சொல்லப்பட்ட அனைத்தும் ஹதீஸ்கள்தான் என்ற கூட்டம்

மூன்று:அல் குர்ஆனுக்கு முரண் இல்லாத வகையில் சரியான அறிவிப்பாளர் ஊடாக அறிவிக்கப்பட கூடிய ஸஹீஹான அறிவிப்புகள் சரியானது என்ற கூட்டம்.

இதில் நாம் முதல் இரண்டு வகை அல்லாத மூன்றாவது வகையான நடுநிலையான இடத்தில் இருந்தே ஹதீஸ்கள் நபி ஸல் அவர்கள் வழியாக வந்த வஹியா இல்லையா என்பதை அறிய முடியும்.

எந்த வித சந்தேகமும் இல்லாத அல் குர்ஆனுடன் ஒப்பிட்டே ஹதீஸ் வழியாக வரக்கூடிய வஹியை இனம் காண வேண்டுமே தவிர சந்தேகமான ஒன்றின் ஊடாக வஹியை அறிய முடியாது என்பதை கூறி நமது ஆய்வை முன்வைக்கிறோம்.

ஒன்று:
======

இமாம் இப்னுல் கைய்யிமின் கூற்றை பிழையாக விளங்கியவர்கள்.

இமாம் இப்னுல் கய்யிம் எழுதிய இஃலாமுள் முஅக்கியீன் என்ற நூலில் கீல்கொண்டவாறு ஒரு வாசகம் கூறியுள்ளார்.அதன் அர்த்தம் என்ன என்று கூட தெரியாமல் உலரியுள்ளனர் இந்த அன்சார் மௌலவியின் வகைறாக்கள்.இப்போது இமாம் இப்னுல் கய்யிம் கூறியதை சரியாக மொழிபெயர்த்து வெறும் மொழிபெயர்ப்பை சரியாக விளங்கினாலே இவர்கள் அரபு மொழிகூட சரியாக புரியாதவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அரபியில் சொல்லப்பட்டதன் மொழிபெயர்ப்பை விளங்கினால்தான் ஆய்வுக்கே முதலில் செல்ல முடியும்.அரபு மொழியில் சொல்லப்பட்டது என்ன என்று அறியாமல் அதை ஆய்வு செய்து மக்களிடம் பரப்பினால் இவர்கள் விளங்கியதுபோல் அரைகுறையாகவே விளங்க வேண்டி வரும்.

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகிறார்கள்:
قال إبن القيم معاذ الله أن نرد لرسول الله ص سنة صحيحة غير معلومة النسخ ابداً

மாற்றப்பட்ட சட்டங்களைக் கொண்ட ஹதீஸ்களை தவிர ஸஹீஹான சுன்னா எதையும் நாம் மறுப்பதை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக.!!

ஆதாரம்:நூல் இஃலாமுல் முவக்கிஈன் (2/347)

முதலில் இமாம் இப்னுல் கய்யிம் கூறிய இந்த அரபு வாசகத்தை ஒவ்வொரு சொல்லாக பதிந்து கருத்தையும் பதிவோம்.

معاذ الله அல்லாஹ் பாதுகாப்பானாக.
أن نرد لرسول الله ص நபி ஸல் அவர்களுக்குரிய
سنة صحيحة ஸஹீஹான சுன்னாவை
غير معلومة النسخ ابداً மாற்றப்பட்ட (சட்டத்)தை தவிர

மாற்றப்பட்ட சட்டம் என்றால் என்ன?

ناسخ என்றால் நபி ஸல் அவர்கள் ஒரு சட்டம் சொல்லி இருப்பார்கள் பினனால் அந்த சட்டத்தை வேறொரு சட்டம் மூலம் மாற்றி இருப்பார்கள்.

மாற்றிய மாற்றப்பட்ட இருவகை சட்டமும் ஸஹீஹானது என்பதும் உறுதி.ஆனால் இரண்டும் ஸஹீஹ் என்றாலும் மாற்றப்பட்ட காரணத்தால் மாற்றப்பட்ட சட்டத்தை நாம் நமக்கு சட்டமாக ஏற்றுகொள்ள மாட்டோம்.அதனை மறுத்து விடுவோம்.

அதனால்தான் இப்னுல் கய்யிம் அவர்கள் கூறுகிறார்கள் மாற்றப்பட்ட சத்தை தவிர மற்ற ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதை இட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக என்று.

இதை இவர்கள் விளங்கியது எப்படி என்றால் மாற்றப்பட்ட சட்டம் தவிர மற்ற எல்லா ஹதீஸ்களும் ஸஹிஹானது தான் என்று மடத்தனமாக விளங்கி உள்ளனர்.

இங்கு இப்னுல் கய்யிம் அவர்கள் மாற்றப்பட்டவை தவிர மற்ற எல்லா ஹதீஸ்களும் ஸஹீஹ் என்று சொல்லவில்லை மாறாக மாற்றப்பட்ட ஹதீஸை தவிர ஸஹீஹான ஹதீஸை மறுக்க கூடாது என்று கூறியுள்ளார்கள்.

இலகுவாக புரியும்படி இதற்கு ஒரு உதாரணம் ஒன்றை கூறுகிறேன் பாருங்கள்.
------------------------------------------------------------------------

"உடையாதது தவிர நல்ல முட்டைகள் அனைத்தும் பெறுமதியானது" என்று ஒருவர் சொன்னால் உடையாத அனைத்தும் நல்ல முட்டைகள் என்று சொல்வோமா?இல்லவே இல்லை நல்லதை தேடி நல்லதை மட்டும் எடுக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.

உடையாதது தவிர முட்டைகளில் கூழ் முட்டை இல்லையா? கூழ் முட்டை எது நல்ல முட்டை எது என்று அறிய நமக்கு வாய்ப்பு இருந்தும் உடையாததை தவிர மற்றது எல்லாம் நல்ல முட்டை என்று சொல்லி முட்டைகள் அனைத்தையும் உண்ண முடியுமா?

இந்த சாதாரண விடயத்தை கூட விளங்க முடியாத இஸ்மாயீல் ஸலபி அன்ஸார் தப்லீகி கூட்டம் எதைத்தான் விளங்குமோ தெரியவில்லை.

இப்னுல் கய்யிம் இதை சொல்வதற்கு காரணம் என்ன?

மேலே சொல்லப்பட்ட வாசகம் எதற்காக சொல்லப்பட்டது என்பதை அறிந்தால் இப்னுல் கய்யிமின் கூற்றை சரியாக புரிய முடியும்.

ராபிலாக்களில் சிலர் குர்ஆனுக்கு மேலதிகமாக வரக்கூடிய சட்டங்கள் ஹதீஸில் இருந்தால் அதை மறுக்க கூடியவர்களாக இருந்தனர்.குர்ஆனின் சட்டத்துக்கு மேலதிக சட்டங்கள் ஹதீஸில் இல்லை என்று விளங்கினர் .அதற்கு மறுப்பு கொடுக்கவே இமாம் இப்னுல் கய்யிம் இதை கூறி உள்ளனர்.

குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சொல்வது வேறு குர்ஆனுக்கு மேலதிகமாக உள்ளது என்று சொல்வது வேறு.
நாம் சொல்வது குர்ஆனுக்கு நேரடியாக முரண்படுகிறது என்று கூறியே மறுக்கின்றோம்.

இமாம் இப்னுல் கய்யிம் இமாம் ஷாபி போன்றவர்கள் அல் குர்ஆனுக்கு ஒரு ஹதீஸ் நேர்பாடாக வந்தால்தான் அது ஸஹீஹ் ஆகும் என்ற கருத்தை சொல்லி உள்ளனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

இரண்டு:
========

அல் குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண் ஆகும் என்பது பற்றிய ஹதீஸ் விதி உள்ளதா?

இமாம் ஷாபியின் கூற்று:

المسألة الخامسة خبر الواحد إذا تكاملت شروط صحته هل يجب عرضه على الكتاب قال الشافعي رضي الله عنه لا يجب لأنه لا تتكامل شروطه إلا وهو غير مخالف للكتاب ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.

நூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438

காலி அப்துல் ஜப்பாரின் கூற்று:

"ஸஹாபாக்கள் ஆஹாதான ஹதீஸ்களை விட அல் குர்ஆனை முட்படுத்தினார்கள்"

நூல்:அஹ்காமுல் குர்ஆன் பாகம் : 4 பக்கம் :438

ஈஸா பின் இபானின் கூற்று:

"ஹதீஸை குர்ஆனுடன் ஒப்பிட்டு பார்ப்பது கடமையாகும்"
நூல்:அஹ்காமுல் குர்ஆன் பாகம் : 4 பக்கம் :438

இமாம் குர்துபியின் கூற்று:

والخبر إذا كان مخالفا لكتاب الله تعالى لا يجوز العمل به. ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.

நூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213

மூன்று :
========

மாற்றப்படாத அனைத்து ஹதீஸ்களும் ஸஹீஹ் ஆகுமா?அப்படி ஒரு விதி உள்ளதா?

இப்னுல் கய்யிம் அவர்கள் மாற்றப்படாத மற்ற அனைத்தும் ஸஹீஹான ஹதீஸ்கள் என்று எங்கே சொல்லி உள்ளார்?

மாற்றப்படாதது தவிர மற்ற ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்க முடியாது என்றுதானே இப்னுல் கய்யிம் சொல்லி உள்ளார்.

மாற்றப்படாதது தவிர மற்ற ஹதீஸ்கள் எல்லாம் ஸஹீஹ் என்று சொல்வது வேறு மாற்றப்படாதது தவிர ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்க முடியாது என்று சொல்வது வேறு.

மாற்றப்படாததில் சரியானதை பின்பற்ற வேண்டும் என்றுதானே இப்னுல் கய்யிம் கூறி உள்ளார்.மாற்றப்படாதது தவிர மற்ற அனைத்தும் ஸஹீஹ் என்று அவர் கூறவே இல்லை.

ஸஹீஹ் ஆனதை பின்பற்ற சொல்லி உள்ளார்.ஸஹீஹானதை எது என்று அறியும் வழி முறை ஹதீஸ் விதிகள் ஊடாக அறிய முடியும்.சிலர் பார்வையில் சரியானது சிலர் பார்வையில் பிழையாக உள்ளதும் உள்ளது.

எனவே நாம் ஹதீஸ் விதிகளை கொண்டு ஆய்வு செய்து இப்னுல் கய்யிம் சொல்வதுபோவும் ஸஹீஹானதை அறிய முடியும்.

இந்த வித்தியாசம் தெரியாமல் கத்துகிறது கதருகிறது இந்த கூட்டம்.

நான்கு:
======

ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்க முடியுமா?

இமாம் இப்னுல் கய்யிமின் அந்த கூற்று எந்த வகையிலும் நமக்கு எதிராக அமையவில்லை மாறாக அந்த கூற்று நமத்து கருத்துக்கு ஒத்தே வருகிறது.

நாமும் ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்க கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம்.எது ஸஹீஹ் ஆனது எது ஸஹீஹ் இல்லை என்பதில்தான் இவர்கள் நம்முடன் முரண்படுகின்றனர்.

மாற்றப்பட்ட ஸஹீஹானதை தவிர ஏனைய ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்க முடியாது என்பதில் இமாம் இப்னுல் கய்யிம் சொல்வதுபோல் நாம் உறுதியாக உள்ளோம்.

இனி..

ஐந்து:
======

அல் குர்ஆனுக்கு முரண் என்ற வகையில் அல்லாமல் வேறு வகையில் ஹதீஸை மறுக்க முடியுமா?

இந்த கேள்விக்கு பதில் சொல்ல நாம் "ஷாத்"என்ற ஹதீஸ் வகை பிரிவுக்கு செல்ல வேண்டும்.

"ஷாத்" என்றால் என்ன?

"ஷாத்" என்றால் பல அறிவிப்பாளருக்கு ஒரு அறிவிப்பாளர் மாற்றமாக அறிவிப்பது.

அல்லது

"பலமான அறிவிப்பாளருக்கு அதை விட பலம் குறைந்த அறிவிப்பாளர் முரணாக அறிவிப்பது"

இந்த அடிப்படையில் நோக்கினால் கூட ஹதீஸ்கள் என்பது அல் குர்ஆனின் அறிவிப்பைவிட குறைந்த பலம் உள்ளவையே.

அல் குர்ஆனின் அறிவிப்பு என்பது ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்துக்கு அறிவித்து இன்றுவரை அறிவிப்பாளர் தொடர் சமுதாயமாகவே இருக்கும்.அல் குர்ஆனின் பெயரின் எந்த ஹதீஸ் துறை அறிஞர்களும் சந்தேகமோ பலயீனம் என்றோ எதையும் மறுத்தது இல்லை ஆனால் ஹதீஸ்கள் விடயத்தில் அறிஞர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை புகாரியிலும் முஸ்லிமிலும் பலயீனமான ஹதீஸ்கள் உள்ளதாக கூறியே வருகின்றனர்.

சில அறிஞர்கள் ஹதீஸை ஸஹீஹ் என்பார்கள் சில அறிஞர்கள் அதே ஹதீஸை பலயீனம் என்று சொல்வார்கள்.இந்த கதை அன்று தொடக்கம் இன்றுவரை தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

உமர் ரலி அவர்கள் குர்ஆணை ஆதாரமாக கொண்டு பாத்திமா பின்த் கைஸ் என்ற ஸஹாபி பென்னை சந்தேகத்துக்கு உட்படுத்தினார்கள்.அல் குர்ஆன் இல்லை என்றால் பாத்திமா பின்த் கைசை எப்படி சந்தேகத்துக்குரிய அறிவிப்பாளராக ஆக்க முடியும் ?இதை உமர் ரலி அவர்கள் சொன்னது வெறும் கற்பனையிலா?இல்லை மிகவும் பலமான குர்ஆணை ஆதாரமாக நிறுத்தியா?

ஆறு:
=====

புகாரி முஸ்லிம் ஹதீஸ்கள் அனைத்தும் ஸஹீஹானதா?

அதே போன்று இமாம் புகாரி அவர்கள் முஸ்லிமில் வரும் செய்தியை மறுத்துள்ளார்கள்.இதுவும் அல் குர்ஆனுடன் ஒப்பிட்டே மறுத்துள்ளார்கள்.முஸ்லிமில் வந்தது எல்லாம் அல் குர்குர்ஆன் போன்று வஹிதான் என்றால் எதற்கு இமாம் முஸ்லிம் அவர்கள் ஹதீஸ் என்று பதிந்ததை இமாம் புகாரி மறுக்க வேண்டும்?

புகாரி முஸ்லிம் பற்றி இமாம் அல்பானியின் கூற்று

"சில காழ்ப்புணர்வு கொண்டவர்கள் புகாரி முஸ்லிமில் கிரந்தங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதோடு அவற்றில் உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் சரியானதுதான் என்ற ஜாஹிலிய பண்பில் உள்ளனர்".

ஆதாரம்:ஸில் ஸிளதுள் அஹாதீத் அல் ஸஹீஹா(2540)

நான் ஆய்வு செய்கையிலே புகாரி முஸ்லிமில் உள்ள ஹதீஸ்களில் சில பலயீனமான ஹதீஸ்கள் உள்ளது என்பது தெளிவாகிறது.நான் சொல்வதில் யாருக்காவது சந்தேகம் ஏற்பட்டால் "பத்ஹுள் பாரியை நாடுங்கள்" அதில் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் அதிகம் அதிகமான விமர்சனங்களை முன்வைத்துள்ளதை காண முடியும்.

ஆதாரம்: பத்வா அல்பானி ( 526)

புகாரியில் உள்ள ஹதீஸை முஸ்லிமே மறுத்துள்ளார்கள்.

இக்ரிமா என்ற அறிவிப்பாளர் வழியாக இமாம் புகாரி அறிவித்த ஹதீஸ்களை இமாம் முஸ்லிம் அவர்கள் மறுத்துள்ளார்கள்.இக்ரிமாவை இமாம் முஸ்லிம் அவர்கள் பலஈனமாக காண்கிறார்கள் ஆனால் இமாம் புகாரி இக்ரிமாவை பலமாக கண்டு அவர் வழியாக அறிவிக்கின்றார்கள்.

இங்கு புகாரி இமாம் ஏற்றுகொள்வதை இமாம் முஸ்லிம் அவர்கள் மறுக்கின்றறாக்கள்.

ஏழு
=====

புகாரி முஸ்லிமில் உள்ள சில ஹதீஸ்களை மறுத்த அறிஞர்கள் பட்டியல்.

புகாரி
முஸ்லிம்
அபூ சூர்ஆ
அபூ தாவூத்
அபூ ஹாதிம்
திர்மிதி
நசாயி
தார குத்னி
பைஹகி
இப்னு தைமியா
இப்னு ஹஜர்
அல்பானி
ஸாலிஹ் உதைமின்

முடிவுவுரை
=========

புகாரி முஸ்லிம் போன்ற நூல்கள் அல் குர்ஆன் போன்று தவறுக்கு அப்பால் பட்டது அல்ல என்பதை அதை எழுதிய இமாம்களான புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் துறை அறிஞர்களே ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

அத்தோடு எல்லோரும் ஏற்றுகொள்ளும் விதியான பலமானவர் பலம் குறைந்தவருக்கு மாற்றமாக அறிவிப்பது அல்லது பலருக்கு சிலர் முரண்பட்டு அறிவிப்பது என்ற ஹதீஸ் கலை நிபந்தனை ஊடாக சில முக்கிய குறிப்புகள் உள்ளன.

ஹதீஸ் கிரந்தங்களில் வரும் ஹதீஸ்களை விட அல் குர்ஆன் மிகவும் பலமான அறிவிப்பில் வந்துள்ளது.

ஹதீஸ்களை அறிவித்தவர்களைவிட அல்குர்ஆனை அறிவித்தவர்கள் அதிகமானவர்கள்

ஹதீஸ கலை அறிஞர்கள் எவருமே ஹதீஸ் விடயத்தில் செய்ததுபோல் அல்குர்ஆனில் சிலதை ஏற்று சிலதை மறுத்த வரலாறு இல்லை.

ஹதீஸ்கள் இட்டுகட்டபட்டது போன்று அல் குர்ஆனின் பெயரில் இட்டுகட்டவும் முடியாது இட்டுக்கட்டப்படவும் இல்லை.

ஹதீஸை அறிவிப்பதில் நினைவு சக்தி குறைவு ஏற்படுவதுபோல் அல் குர்ஆனை அறிவிப்பதில் நினைவு சக்தி குறைகள் ஏற்படவில்லை

சில ஹதீஸ்களை சில இமாம்கள் பலயீனம் என்று சொல்லி உள்ளனர் அதே ஹதீஸ்களை சில இமாம்கள் ஸஹீஹ் என்று சொல்லி உள்ளனர் இவ்வாறு குர்ஆனுக்கு சொல்ல முடியாது.

மாற்றப்பட்ட ஹதீஸ்கள் தவிர ஸஹீஹான ஹதீஸை மறுக்க கூடாது என்றால் ஸஹீஹான ஹதீஸ்களில் மாற்றப்பட்டதை தவிர மற்ற ஸஹீஹான ஹதீஸ்கள் மறுக்கப்பட கூடாது என்பதுவே அல்லாமல் மாற்றப்பட்டது தவிர மற்ற எல்லாம் ஸஹீஹ் என்பது அல்ல.

எனவே எந்த ஹதீஸாக இருந்தாலும் அது எந்த ஹதீஸ் கிரந்தத்தில் இருந்தாலும் எந்த வித சந்தேகத்துக்கும் இடம் இல்லாத எந்த குறையும் இல்லாத யாராலும் மாற்ற முடியாத இட்டுகட்ட முடியாத அல் குர்ஆனுக்கு அது முரண்படுமாயின் அதை நாம் அல்குர்ஆணை விட முற்படுத்த முடியாது.

அல் குர்ஆனை மறுத்தவர்களை நாம் காபிர்கள் என்று சொல்வதுபோல் புகாரி முஸ்லிமில் போன்ற ஹதீஸ் நூல்களில் உள்ள சில ஹதீஸ்களை மறுத்தவர்கள் அனைவரையும் வழிகேடர்கள் காபிர்கள் என்று இஸ்மாஈல் அன்சார் தப்லீகி போன்ற குழப்பி கும்பல் சொல்ல தயாரா? என்ற சவாலுடன் இந்த பதிவை முடித்து கொள்கிறேன்.

இது பற்றிய இன்னும் ஆழமாக எழுத வேண்டி இருந்தாலும் இப்போது புதிய தகவல்களை வெளியிட வேண்டாம் என்று சில நண்பர்கள் எமக்கு சொன்னதன் அதன் நண்மை கருதி சில தகவல்களை இங்கு நாம் பதியவில்லை.

---நன்றி---
அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)